Monday, October 11, 2010

Thousand years of Brihadeeswara Temple

A PAGE FROM HISTORY


An architectural wonder. A proud reminder of the Hindu glory
By V Shanmuganathan

The great emperor of Chola dynasty, Raja Raja-I built a majestic temple for Lord Shiva in Thanjavur (Tanjore), Tamil Nadu. Called Peruvuidayar Kovil, or Brihadeeswarar Temple, or sometimes Rajarajeswaram it is on rolls of the UNESCO heritage sites as part of the circuit called "Great Living Chola Temples".

Tamil Nadu remains as the wonderful resort of classical India whether it is temple architecture, dance, vocal or instrumental music. It hosts the oldest living temples in India, which remained unaffected by iconoclasm of Turks, Mughals and Bahmani invaders.

ONE thousand years ago, the great emperor of Chola dynasty, Raja Raja-I built a majestic temple for Lord Shiva in Thanjavur (Tanjore), Tamil Nadu. Called Peruvuidayar Kovil, or Brihadeeswarar Temple, or sometimes Rajarajeswaram it is on rolls of the UNESCO heritage sites as part of the circuit called "Great Living Chola Temples". The Tamil Nadu government recently organised a grand function, spanning over five days, to celebrate the millennium of its consecration. A scintillating Bharatnatyam recital by 1,000 artistes, led by eminent danseuse Padma Subrahmanyam, took the cream of the cake. A host of events including exhibitions, cultural shows, seminars and deliberations were also organised to mark the occasion.

Tamil Nadu remains as the wonderful resort of classical India whether it is temple architecture, dance, vocal or instrumental music. It hosts the oldest living temples in India, which remained unaffected by iconoclasm of Turks, Mughals and Bahmani invaders. Temples in ancient India were not merely centres of religion, but also art, culture, literature and vocational training. The Brihadeeswarar Temple stands as a reminder to our great culture, art, architecture, religion and language. It is also a symbol of the great wealth and prowess of Chola dynasty, which expanded its empire on Indian Ocean.

The construction of this ‘Big Temple’ begun in 1003 AD and was completed in six years before being consecrated in 1010 AD. The unique archaeological feature of the temple is its Vimana (temple tower) standing 216 feet tall. The summit stone weighing about eighty tons was dragged on to the top through a slope path from a distant Village, called ‘Sarapallam’. It rises over the sanctum, on a square base about a hundred feet, dominates the whole structure. Its shadow never falls on the ground.

The valiant king Raja Raja-I, who reigned between 985 and 1014 AD, was renowned for land and naval conquests. He found peace at the feet of Lord Shiva. The construction of Brihadeeshwara temple coincides with a visible shift in his policies from military expansion to internal administration. But here is a lesson for us. Neither he, nor his illustrious son Rajendra I (who built the famous Shiva temple at Gangaikonda Cholapuram similar in design to Brihadeeshwara temple) neglected external and internal security unlike some people, who weakened the martial spirit of India through.

The distinct feature of Brihadeeshwara temple is magnificent monolith Nandi bull, the mount of Lord Shiva, facing the temple tower. The shrine of goddess Brihanayaki, Ganapati, Subrmanya, Dakshinamurty, Nataraja are finely carved. The corridor surrounding the sanctum is a treasure chest of Chola painting and sculpture. The walls of this cave-like corridor were plastered with lime and used as a large canvas for the paintings.

The paintings, which have survived time and a seventeenth century coat of paint, are very beautiful in detail and colour and accuracy.

The story of Sundaramurthy Nayanar reaching Kailash on a white elephant is depicted on another wall. Karuvur Thevar, the Guru of Raja Raja is portrayed in an impressive manner. While the sculptures of Shiva in this corridor are imposing and colossal, the series of eighty one dance poses are superb illustrations of the Natya Sastra.

There is an interesting and popular story about the deep personal interest that the King evinced in the construction of the temple. It is said that one day, when the chief sculptor was deeply absorbed in chiseling the huge Nandi, King Raja Raja Chola went and stood by his side. The sculptor, thinking that it was his boy attendent standing by his side ordered him to prepare a pan (betel leaf with araca nut and lime). The king calmly obliged, folded a couple of betel leaves and handed it over to the sculptor who received it without seeing the hands that supplied them. Chewing the pan in his mouth, the sculptor started uttering words of praise, appreciating the king who planned this unique monument. Later he asked his attendant to bring the spitton near him. The king silently obeyed. When the sculptor raised his head after spitting the chewed betel leaves, he was terribly shocked to see the great Raja Raja Chola standing in front of him. Immediately he touched the feet of the king with tears and made an apology to the emperor, in a voice choked with emotion. The king, with a smiling face, lifted him up and consoled him by telling that it was a rare privilege for him to serve the sculptor whose hands chiseled the sculptures of the magnificent temple. Raja Raja Chola, though a worshiper of Shiva, at the same time, was tolerant to other religions.

He endowed and built temple of Maha Vishnu. He granted a village to the Buddhist Vihara at Nagappattinam. The Brihadeeswara temple was not an act of royal fancy. It is iconic of the glory of Tamil Saiva Siddhanta. Amongst two principal schools of Bhakti cult prevalent in South India, Saivism has a larger following.

In Tamil districts of Sri Lanka Saivism holds unchallenged sway. In Saiva Siddhanta Shiva is believed to exercise the functions of creation, protection, destruction, prevention from lapses is the result of enjoyment of one’s action and beneficent action. These functions He is said to discharge with a view to release the struggling souls from the bondage of karma, and present unto them the ultimate knowledge of Shiva. The goal of individual souls is to realise that it is made of Shiva-Tatva (element of Shiva), and though not merging in Shiva, remain at its feet like beloved child. The icon of Lord Nataraja is most symbolic of Saiva Siddhanta. Temple worship is an indispensable part of Saiva Siddhanta. That might explain why Tamilians have an image of orthodox and scrupulous temple goers.

Raja Raja Chola’s period was one of height of Saivism. This had been made possible by the surge of Shiva devotion brought by Nayanar saints in previous centuries. The heart melting hymns (Devaram) to Lord Shiva by Sambandar, Appar and Sundaramurthy as well as Manikkavasagar in the 9th century who wrote Tiruvasagam are worth hearing. They, in reality, were the pioneers of Bhakti movement that later swept across other parts of India in the medieval age.

He was an extra ordinarily powerful king and a grand monrch of southern India. His army crossed the ocean by ships and conquered many islands. His was a versatile personality. It is a matter of pride that Tanjore temple attracted the appreciation of UNESCO for its art and architecture. Brihadeeswara Temple, is the shining jewel in the crown of Bharatmata. No doubt, it is, Tamil Nadu’s contribution to the pride of India. Let us all celebrate this one thousand years architectural wonder.

Saturday, September 25, 2010

Raja Raja Chola's contribution to india's pride

Raja Raja Chola's Contribution to India's Pride

V. Shanmuganathan

One thousand years ago, Great Emperor, Raja Raja Chola, built a temple
dedicated to Lord Shiva in Tamil Nadu. It=92s millennium celebrations
are going on in Tanjore.

Tamil Nadu government is organising a five day cultural festival
involving thousands of artists to commemorate its consecration.
Thousand folk artists are participating in the cultural functions. A
host of events including special exhibition, cultural shows, seminars
and deliberations are being organised to mark the occassion. To this
day, the Big temple is a remainder of our great culture, art,
architecture, religion and language.

The construction work of the temple begun in 1003 A.D. and completed
six years later, during the reign of the renowned emperor Raja Raja
Chola. The unique archaeological feature of the temple is that the
Vimana. It is 216 feet tall. The topmost stone weighing about eighty
tons was dragged on to the top through a slope path from a distant
Village, called =91Sarapallam=92. The Vimana of this temple, which rises
over the sanctum on a square base of about a hundred feet, dominates
the whole structure. The shadow never falls on the ground.

A gigantic stone "Lingam" in sanctum sanctorium, gives darshan to
lakhs of people. This main deity is called as Sri Brihadeeshwara, the
Lord of universe.

The distinct feature of this temple is the magnificient construction
of the monolithic Nandi, the bull which lord Shiva rides, located in
front of the temple tower.

The shrine of goddess Brihanayaki, Ganapati, Subrmanya, Dakshinamurty,
Nataraja are all finest examples of true devotion, dedication, art and
architecture. The gigantic Dhwarapalakas, guardian deities of twelve
feet tall are situated at the entry point of the temple. Perhaps these
tallest statues can be seen only in Tanjore Temple. There is a
corridor surrounding the sanctum. This is the treasure house of Chola
painting and sculpture. The walls of this cave like corridor were
plastered with lime and used as a large canvas for the paintings. The
paintings, which have survived time and a seventeenth century coat of
paint, are very beautiful in detail and colour and accuracy.
Dakshinamurthy, Nataraja surrounded by saints are master pieces of
chola paintings. The story of Sundarmurthy nayanar reaching Kailash on
a white elephant is depicted on another wall. Karuvur Thevar, the Guru
of Raja Raja is portrayed in an impressive manner. While the
sculptures of Shiva in this corridor are imposing and colossal, the
series of eighty one dance poses are superb illustrations of the Natya
Sastra.

There is an interesting and popular story about the deep personal
interest that the King evinced in the construction of the temple. It
is said that one day, when the chief sculptor was deeply absorbed in
chiseling the huge Nandi, King Raja Raja Chola went and stood by his
side. The sculptor, thinking that it was his boy attendent standing by
his side ordered him to prepare a pan (betel leaf with araca nut and
lime). The king calmly obliged, folded a couple of betel leaves and
handed it over to the sculptor who received it without seeing the
hands that supplied them. Chewing the pan in his mouth, the sculptor
started uttering words of praise, appreciating the king who planned
this unique monument. Later he asked his attendant to bring the
spitton near him. The king silently obeyed. When the sculptor raised
his head after spitting the chewed betel leaves, he was terribly
shocked to see the great Raja Raja Chola standing in front of him
Immediately he touched the feet of the king with tears and made an
apology to the emperor, in a voice choked with emotion. The king, with
a smiling face, lifted him up and consoled him by telling that it was
a rare privilege for him to serve the sculptor whose hands chiseled
the sculptures of the magnificent temple. Raja Raja Chola, though a
worshiper of Shiva, at the same time, was tolerant to other religions.
He endowed and built temple of Maha Vishnu. He granted a village to
the Buiddhist Vihara at Nagappattinam.

Raja Raja Chola was not merely a patron of art and architecture but
also of literature. He has written many books He was courageous with
conviction.

He was an extra ordinarily powerful king and a grand monrch of
southern India. His army crossed the ocean by ships and conquered many
islands. His was a versatile personality. It is a matter of pride that
Tanjore temple attracted the appreciation of UNESCO for its art and
architecture. Brihadeeswara Temple, is the shining Jewel in the crown
of Bharatmata. Nodout, it is, Tamilnadu=92s contribution to the pride of
India. Let us all celebrate this one thousand years architectural
wonder.

Thursday, July 8, 2010

world tamil conferance

THE WORLD TAMIL CONFERENCE
RE AFFIRMATION OF THE GREATNESS OF TAMIL LANGUAGE AND ITS CLASSIC LITERATURE
V. Shanmuganathan
The First world Classical Tamil Conference held in Coimbatore between 23rd and 27th of June
2010 was conducted in a grand manner. 3000 delegates from 50 countries presented their
research papers on the uniqueness and antiquity of the Tamil language, culture, art and society.
More than 2.4 lakhs people are estimated to have visited the venue. The Exhibition hall, Tamil
Internet IT Hall, Conference main pandal and food courts were buzzing with life.
The conference was inaugurated with pomp and splendor. An eight kilometer stretch of
the pageant was titled as “Iniyavai Naarpathu” or “Sweet Forty”. The three hour procession
of colourful floats was one of the many highlights. They provided vivid images of the
achievements of the Tamil People. Literary excellence, economic strength, love, friendship,
devotion, valour, love for nature, unity, architecture, pioneering in the shipping trade, the bravery
of women, the sacrifice of revolutionary warriors, the contribution of farmers and an emphasis
on environmental protection were themes represented by the floats. The aim was to highlight
the greatness and uniqueness of the Tamil Language. Compaired to the previous 8 world tamiln
conferences, this one by far exceeded all expectations.
Literature goes back 3,000 years and reflects universal elements such as harmony, art of
antiquity, Style or content such as reason, clarity, order, restrain, humanitarian outlook. It has
a body of ancient literature meeting the core attributes of Classicism and is held as a valuable
heritage bequedthed in to us. The literary tradition is original and not borrowed. The Tamil
classical language and literature are distinct and modern having a distinct grammer of its own.
President, Pratibha Devi Singh Patil hailed Tamil as having the oldest literature among the
living languages of the World. She said “Tirukkural” written by “Thiruvalluvar was a remarkable
treatise on ethics. “Silapathikaram” and “manimekalai” were works of excellence as were the
epics of Kamba Ramayanam and Jeevaka Chintamani. The soul – stirring hymns of Nayanmars
and Alvars.
The poems and songs of Subramanya Bharati evoked in the minds of the people “Deep feelings
of patriotism during our freedom struggle”. She emphasized the point that the history of the
Tamils is our Nation’s pride. Tamils have contributed in a big way to India’s progress and in
shaping its identity as a nation that is rich in art, music, architecture and literature. The next
generation of Tamils must anchor as well as ‘equip themselves with knowledge of Tamil culture,
literature and values.
Mr. Iravatham Mahadevan an IAS Officer (Retd) an Epigraphist, Tamil scholar says that “The
legend that Sanskrit and Tamil emerged from the two sides of the damaru (drum) of Shiva says
it all – the immemorial antiquity and the equal divine status accord in our tradition to the two
languages recognized as classical.
Mr. M. Karunanidhy delivered the valedictory address of the five day conference. He said that
a Rs. 100 crore fund would be established for Tamil Development. He also said that, efforts
would be taken to translate well known Tamil works into other languages. Significant works
of other languages would also be translated into Tamil. Mr. Pranab Mukherjee who presided
over the valedictory function expressed the hope that the conference would inspire many more
accomplishments in future.
Fortunately D.M.K. and its leaders have kept their atheism and anti god feelings away from the
conference hall. Real Tamil language is full of patriotism, national, culture and spiritual feelings.
(The writer can be contacted through email id : vsnathan7666@gmail.com

Thursday, January 15, 2009

Tamilnadu history..in a short form

வரலாற்றைப்பொறுத்தவரை ஒரு எளிய முன்வரைவு நமக்கு அவசியமானது. தமிழக வரலாற்றை நாம் கீழ்க்கண்டவாறு புரிந்துகொள்ளலாம்.

1. சங்க கால தமிழகம்

சங்க காலப்படைப்புகளில் இருந்து கிடைக்கும் தரவுகளைக் கொண்டு நாம் உருவகித்துக்கொள்ளும் ஒரு காலகட்டம் இது. சிலப்பதிகாரம் வரைக்கும் சித்தரிக்கப்படும் தமிழகம் இது என்று சொல்லலாம். கரிகால்சோழன், பாண்டியன் தலையானங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் , சேரன் செங்குட்டுவன் ஆகியோர் இக்காலகட்டத்தின் மிகச்சிறந்த மன்னர்கள். இக்காலகட்டத்தில் சேரசோழ பாண்டிய அரசுகள் இருந்தாலும் அதேயளவுக்கு வலிமையாக இனக்குழுத்தலைவர்களும் நாடாண்டார்கள். பெரும்பாலான போர்கள் மூன்று முடிமன்னர்களும் சிறு ஆட்சியாளர்களை வென்று பெரிய அரசை உருவாக்கும் பொருட்டு நிகழ்த்தியவை

2. களப்பிரர் கால தமிழகம்

கிபி ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் தக்காண மையநிலத்தில் இருந்து வந்த சமணர்களான களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்ட காலகட்டம். கல்வெட்டு ஆதாரங்கள் போன்றவை அதிகம் கிடைக்காத காலகட்டம். சம்ஸ்கிருத சமண நூல்களை ஆதாரமாகக் கொண்டு இக்காலகட்டத்தைப்பற்றி ஆராய்ச்சிகள் செய்யலாமென்றாலும் அப்படி ஏதும் செய்யப்பட்டதாகத்தெரியவில்லை. திருக்குறள் முதலிய நீதிநூல்கள் உருவான காலகட்டம் இது.

3. பிற்கால தமிழகம், சோழ பாண்டியப்பேரரசுகள்

கிபி எட்டாம் நூற்றாண்டு வாக்கில் களப்பிரர் ஆட்சி முடிந்து உருவான தமிழ் முடிமன்னர்களின் ஆட்சி. வடக்கே பல்லவர்களும் தெற்கே சோழர்களும் களப்பிரரை வென்று தங்கள் அரசுகளை மீட்டனர். பேரரசுகள் உருவாயின. ஆரம்பத்தில் பல்லவப்பேரரசு. பின்னர் சோழப்பேரரசு. கடைசியில் சிறிதுகாலம் மட்டும் பாண்டியப்பேரரசு. நரசிம்மவர்ம பல்லவன், ராஜராஜ சோழன்,ராஜேந்திர சோழன், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் போன்றவர்கள் இக்கால பெரும் மன்னர்கள்

4..டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு

1310ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபது மாலிக் காபூர் தெற்கே படைகொண்டு வந்து தமிழ்ப்பேரரசுகளை அழித்தார். பின்னர் கிட்டக்தட்ட அரை நூற்றாண்டுக்காலம் சுல்தான்களின் தளபதிகளால் தமிழகம் ஆளப்பட்டது.
5. நாயக்கர், மராட்டியர் காலம்

விஜயநகர மன்னர் குமாரகம்பணன் 1371ல் மதுரையைக் கைப்பற்றுவதுடன் தொடங்கும் இக்காலகட்டம் 1730 வரை நீள்கிறது. மதுரை, தஞ்சை,செஞ்சி ஆகியவற்றின் நாயக்கர் ஆட்சி நிறுவப்பட்டது. ராணி மங்கம்மாளும் திருமலை நாயக்கரும் நாயக்கராட்சியின் சிறந்த மன்னர்கள். பின்னர் தஞ்சாவூர் மராட்டியரால் ஆளப்பட்டது

6. ஐரோப்பியர் காலம்

பாண்டிச்சேரியை பிரெஞ்சுக்காரர்களும் சென்னையை ஆங்கிலேயர்களும் உருவாக்குவதுடன் தொடங்கும் காலகட்டம். 1947 வரை நீண்டது

7.விடுதலைக்குப்பின்.

1947 தேசவிடுதலைக்குப்பின் தமிழகம் 1951ல் மொழிவழி மாநிலமாக உருவானது.

என்று ஏழு காலகட்டங்களாகப் பிரித்துக்கொள்கிறோம்.

Jeyamohan

Thursday, December 18, 2008

The history of M.G.R.

விலக்கப்பட்டவர்கள்
December 18, 2008 – 12:05 am


கேரளத்தில் இரிஞ்ஞாலக்குடா அருகே உள்ள கொல்லங்கோட்டைச்சேர்ந்தவர் மேலங்கத்துக் கோபால மேனன். கோழிக்கோடு சாமூதிரி மன்னரின் அரசில் அவருக்கு வரிவசூல்செய்யும் ‘அம்சம் அதிகாரி’ வேலை. அம்சம் என்றால் நிலவரிக்கான ஒரு குறைந்தபட்ச பிராந்தியம். இப்போதைய வருவாய் வட்டம் போல. அது அப்பகுதிக்கான நீதிபதி வேலையும்கூட. அவர் திருமணம்செய்துகொண்டது இரிஞ்ஞாலக்குடா வட்டபறம்பில் மீனாட்சி அம்மாவை.

1903ல் திரிச்சூர் அருகே உள்ள குந்நங்குளம் என்ற ஊரில் இருந்த ஒரு நம்பூதிரி மனையில் வாழ்ந்த விதவையான ஒரு நம்பூதிரிப்பெண் கருவுற்றாள். அக்காலத்தில் நம்பூதிரிப்பெண் முறைதவறியதாகத் தெரிந்தால் ஸ்மார்த்த விசாரம் என்ற பேருள்ள ஒரு விசாரணைக்கு ஆளாக்கப்படுவாள். ஸ்மார்த்த சபை குந்நங்குளம் மனையில் அந்த நம்பூதிரிப்பெண்ணிடம் அவளது கருவுக்குக் காரணமானவர்களைப்பற்றிக் கேட்டது. அப்பெண் பத்துப்பதினைந்து பெயர்களைச் சொன்னாள். அதில் ஒன்று மேலங்கத்து கோபாலமேனன்.

ஸ்மார்த்த சபையின் சிபாரிசின்படி கோழிக்கோடு சாமூதிரி மன்னர் அந்த நம்பூதிரிப்பெண்ணை சாதிவிலக்கு செய்தார். அவளால் பெயர் சுட்டப்பட்ட நம்பூதிரிகளுக்கும் சாதிவிலக்கு அளிக்கப்பட்டது. மற்ற சாதியினருக்கு பலவகையான தண்டனைகள் கிடைத்தன. நாயரான மேலங்கத்துக் கோபால மேனன் நாடுகடத்தப்பட்டார். [மேனன் என்பது வரிவசூல் மற்றும் நிதிப்பொறுப்புகளை குடும்ப மரபாக வகிக்கும் நாயர்களுக்கு உரிய குலப்பட்டம்] அக்காலத்து வழக்கப்படி வட்டபறம்பில் மீனாட்சியம்மா கணவனை விவாகரத்து செய்தாள்.

அந்த நம்பூதிரிப்பெண் என்ன ஆனாள்? அத்தனை பேருடன் அவள் ஏன் உறவு வைத்திருந்தாள்? அதை அறிவதற்கு நாம் ஸ்மார்த்தவிசாரம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும். கேரள சரித்திரத்தில் பலவகையான ஆய்வுகளுக்குரிய ஆர்வமூட்டும் சமூக வழக்கமாக இருந்தது அது. அது ஒரு சாதிச்சடங்கு.

கேரளத்தில் உள்ள மலையாளப் பிராமணர்கள் ஒரே சிறு சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நம்பூதிரிகள் எனப்படுகிறார்கள். இவர்கள் கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் ஆந்திராவில் இருந்து மலைப்பாதை வழியாக கேரளத்துக்கு வந்து குடியேறியவர்களாக இருக்கலாம் என்பது பிரபலமான ஊகம். இக்காலகட்டத்தில் பெரும் இஸ்லாமியப்படையெடுப்புகளால் ஆந்திர மையநிலப்பகுதி சின்னபின்னமாகிக்கிடந்தது. பெரும் எண்ணிக்கையில் மக்கள் இடம்பெயர்ந்த காலகட்டம் இது.

கேரளத்து நிலத்தில் பெரும்பகுதி முழுக்க முழுக்க கொடும்காடாகக் கிடந்த காலம் அது. புராதன சேர மன்னர்குலம் சோழர்களின் படையெடுப்பு மூலம் அழிக்கப்பட்டது. கி.பி பதினொன்றாம்நூற்றாண்டுவரை முந்நூறு வருடம் கேரளத்தில் சோழர்களின் நேரடி ஆட்சி நிலவியது. சோழர்களின் ஆட்சி மறைந்தபோது சோழர்களுடைய தளபதிகளாக இருந்தவர்களும் சோழர்களுக்குக் கப்பம்கட்டிவாழ்ந்த உள்ளூர் குறுநிலப்பிரபுக்களும் சுதந்திர அரசர்களாக தங்களை பிரகடனம்செய்துகொண்டார்கள். இவர்களில் சிலர் பழைய சேரமன்னர்களின் வாரிசுகள். ஐதீகத்தின்படி ஐம்பத்தியாறு சிறு அரசுகள் இக்காலகட்டத்தில் சின்னஞ்சிறு கேரள மண்ணில் இருந்தன.

இக்காலகட்டத்தில் கேரளத்துக்கு வந்த ஆந்திர தேசத்து வைதீகர்கள் கேரள மன்னர்களால் விரும்பி வரவேற்கப்பட்டார்கள். ஏன் என்பதை நாம் வரலாற்றுக் கோட்பாட்டாளரான டி.டி.கோஸாம்பியின் பார்வையில் விளங்கிக்கொள்ள முடியும். அக்காலகட்டத்தில் பலவகையான இனக்குழுக்களை ஒன்றாகத்திரட்டி ஓர் அரசமைப்பை உருவாக்கும் முக்கியமான கருத்தியல் சக்தியாக வைதிகம் விளங்கியது. இந்திய நிலப்பகுதியெங்கும் பிராமணர்களின் சாத்வீகமான அதிகாரப்பரவலாக்கம் மூலமே படையெடுப்புகள் இல்லாமல் இனக்குழுக்கள் வெல்லப்பட்டு, ஒற்றைச்சமூகமாக திரட்டப்பட்டு, அரசு உருவாக்கம் நிகழ்ந்தது என்கிறார் டி.டி.கோஸாம்பி

அந்த வழிமுறையையும் டி.டி.கோஸாம்பியே சொல்கிறார். பெருமதம் சார்ந்த கோயில்களை நிறுவுவதும் நாட்டார் வழிபாட்டுத்தெய்வங்களை பெருந்தெய்வங்களாக மாற்றுவதும் முதல்படி. அந்த நம்பிக்கையின் மையச்சரடில் பல்வேறு சாதிகளை அடுக்குவது அடுத்த படி. அவர்கள் அனைவரும் ஏற்கும் கருத்தியல் அதிகாரம் இவ்வாறாக நிறுவப்படுகிறது. அந்த அதிகாரத்தை தங்களை ஆதரிக்கும் மன்னர்களுக்கு வைதீகர்கள் அளிக்கிறார்கள். அவ்வாறாக க்ஷத்ரிய - வைதிக கூட்டு உருவாகிறது. இதுவே நம் மரபின் அதிகாரக்கட்டுமானத்தின் சூத்திரம்.

கேரளநிலத்தில் சிவன்,விஷ்ணு,ராமன்,கிருஷ்ணன் போன்ற பெருந்தெய்வங்களை நம்பூதிரிகள் நிறுவினார்கள். சேரன்செங்குட்டுவன் காலம் முதலே இருந்துவந்த பத்தினித்தெய்வ வழிபாட்டை பகவதி வழிபாடாக உருமாற்றம்செய்தார்கள். கேரளத்தின் அதிகாரம் கோயில்களை மையமாக்கியதாக அமைந்தது. கோயில்கள் நம்பூதிரிகளின் உடைமைகளாக இருந்தார்கள். இவ்வாறு ஒருநூற்றாண்டுக்குள் கேரளத்தின் மொத்த அதிகாரமும் நம்பூதிரிகளின் கைகளுக்கு வந்தது. நம்பூதிரிகளைப் பேணிய கோழிக்கோடு சாமூதிரி, கொச்சி மன்னர் போன்றவர்கள் அவர்களின் ஆசிபெற்று பெரிய மன்னர்களாக ஆனார்கள். பிற சிறிய மன்னர்களை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள்

உச்ச அதிகாரத்தில் இருந்த நம்பூதிரிகள் தங்கள் சாதியின் தனித்துவத்தைப் பேணுவதில் கவனமாக இருந்தார்கள். பிற பிராமணர்கள் எவரிடமும் இல்லாத பல சடங்குகளும் நம்பிக்கைகளும் குலவழக்கங்களும் அவர்களுக்கு உண்டு. அவற்றைப்பேணும்பொருட்டு சாதிச்சபைகளையும், சாதி நீதிமன்றங்களையும், அதற்கான விசாரணை முறைகளையும் உருவாக்கி மிகக்கறாராக கடைப்பிடித்தார்கள். தங்கள் சாதித் தனித்துவத்தைப் பேண விரும்பும் எல்லா சிறிய சாதிகளையும்போல தங்கள் பெண்களுக்கு பிற சாதியிடம் தொடர்பே ஏற்படக்கூடாது என்பதில் குறியாக இருந்தார்கள். ஆகவே பெண்கள் மீது உச்சகட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மூர்க்கமாகப் பெண்களை ஒடுக்கும் இந்த வழக்கம் பெரும்பாலும் எல்லா பழங்குடிகளிடமும் இருப்பதுதான். நம்பூதிரிகளின் பல பழக்கவழக்கங்கள் முற்றிலும் பழங்குடித்தன்மை கொண்டவை.

நம்பூதிரிப்பெண் அந்தர்ஜனம் [உள்ளே இருப்பவள்] என்று அழைக்கப்பட்டாள். அதன் மொழியாக்கம் சாதாரணர்களால் அழைக்கப்பட்டது, அகத்தம்மா. அந்தர்ஜனங்கள் வெள்ளை ஆடை மட்டுமே அணியவேண்டும். உடலையும் முகத்தையும் முழுமையாக மறைத்துக்கொண்டுதான் வெளியே கிளம்ப வேண்டும். குளிப்பதற்குக் கூட தனியாக வீட்டை விட்டு செல்லவே கூடாது. எப்போதும் கையில் ஒரு ஓலைக்குடையை வைத்திருக்க வேண்டும். இதற்கு மறைக்குடை என்று பெயர். ஆண்கள் யாரைக் கண்டாலும் அந்தக்குடையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். விதவை மறுமணம் அனுமதிக்கப்படவில்லை. மொத்தத்தில் இருண்ட நம்பூதிரி இல்லங்களில் பிறந்து இருளில் வாழ்ந்து இருளில் மடியும் வாழ்க்கை அவர்களுடையது.

நம்பூதிரிகள் சிறுபான்மையினர். அவர்களுக்கு நேரடியாக ஆயுதபலம் சாத்தியமில்லை. ஆகவே கேரளத்தில் மட்டும் ஒரு தனி வழக்கத்தை அவர்கள் கடைப்பிடித்தார்கள். நம்பூதிரி ஆண்கள் மன்னர்குடும்பங்களிலும், நாயர்சாதியின் பெருநிலப்பிரபுக்களின் குடும்பங்களிலும் பெண்களை மணம்புரிந்துகொண்டார்கள். அதன்மூலம் அக்குடும்பங்களுடன் உதிர உறவை நிறுவினார்கள். நாயர்கள் நேரடியாக ஆயுதங்க¨ளைக் கையாண்ட சாதி. நிலங்களை கையில் வைத்திருந்தவர்கள். இந்த உறவு நம்பூதிரிகளுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டியது.நாயர்களுக்கு மத அதிகாரத்தை அளித்தது.

இந்த வழக்கம் நின்றுவிடாமலிருக்க நம்பூதிரிகள் ஒரு மரபை சட்டமாக்கினார்கள். நம்பூதிரிச் சாதியில் ஒரு குடும்பத்தின் மூத்த மகன் மட்டுமே நம்பூதிரிப்பெண்ணை மணம் புரிந்துகொள்ள முடியும். பிற மகன்கள் மன்னர்குடும்பங்களிலோ, நாயர் சாதியிலோ மட்டுமே மணம்புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு நம்பூதிரிப்பெண் விலக்கு. நம்பூதிரிகள் ஆண்வழிச் சொத்துரிமை கொண்டவர்கள். நாயர்கள் பெண்வழிச்சொத்துரிமை கொண்டவர்கள். ஆனால் நம்பூதிரிச்சொத்துக்களுக்கு குடும்பத்தின் மூத்த மகன் மட்டுமே வாரிசு. பிறருக்கு எந்த உரிமையும் இல்லை

இதன் விளைவாக நம்பூதிரிச் சொத்துக்கள் நூற்றாண்டுகளாக பிளவுபடவே இல்லை. நம்பூதிரிச்சாதியின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. ஆகவே அவர்களின் ஆதிக்கம் நீடித்தது. ஆனால் நம்பூதிரிப்பெண்களில் மிகப்பெரும்பாலானவர்கள் கன்னியராகவோ விதவைகளாகவோ நின்றுவிட நேர்ந்தது. ஆகவே அவர்களிடம் பாலியல் மீறல்களுக்கான வாய்ப்புகள் சற்று அதிகம். இதனால் நம்பூதிரிகள் தங்கள் பெண்களின் கற்பை கண்காணிக்கவும் தண்டிக்கவும் ஸ்மார்த்த சபை என்ற அமைப்பை உருவாக்கிக்கொண்டார்கள். பாலுறவைக் கண்காணிப்பத¦ற்கென்றே ஒரு தனி அமைப்பு வைத்திருந்த ஒரே சாதி நம்பூதிரிகள்தான்.

ஸ்மார்த்த சபை என்பது ஆசார விதிகளின்படி ஒழுக்க மீறல்களை விசாரிக்கும் ஒரு அமைப்பு. இதன் தலைவர் ஸ்மார்த்தர் என்று அழைக்கப்படுவார். இவருக்கு உதவிசெய்ய பிற நம்பூதிரிகள் உண்டு. ஒழுக்க மீறலுக்குக் குற்றம்சாட்டப்பட்ட நம்பூதிரிப்பெண் உடனடியாக தனி அறையில் கடுமையான காவலுடன் அடைக்கப்படுவாள். நாவிதர் அல்லது வண்ணார் சாதியைச் சேர்ந்த முதியபெண் ஒருத்தி அவளிடம் பேசுவதற்காக அமர்த்தப்படுவாள். குற்றம் சாட்டப்பட்ட பெண் இருக்கும் அறைக்கு வெளியே மூடிய கதவுக்கு இப்பால் நின்றபடி ஸ்மார்த்தர் அவளிடம் கேள்விகள் கேட்பார். அதை அந்த முதியபெண் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணிடம் கேட்டு பதில் பெற்று சொல்லவேண்டும்.

குற்றம்சாட்டப்பட்ட பெண் தொடர்ச்சியாக உணவும் நீரும் இல்லாமல் பட்டினி போடப்படுவாள்.பிற வேலைக்காரிகளை வைத்து அடிப்பதும் சூட்டுகோல் காய்ச்சி சூடுபோட்டு வதைக்கப்படுவதும் உண்டு. அறைக்குள் மிளகாய்தூள்போட்ட புகையை நிறைப்பது, பலநாட்கள் ஈரத்திலேயே போட்டிருப்பது, தொடர்ச்சியாக தூங்கவிடாமல் செய்வது போன்று வதைகளின் பட்டியல் நீள்கிறது. ஒருசமயம் அந்த அறைக்குள் பாம்பு விடப்பட்டிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும், குற்றம் செய்திருந்தாலும் இல்லாவிட்டாலும்! அக்குற்றத்தில் தன்னுடன் ஈடுபட்டவர்களின் பெயர்களை அவள் சொல்லியாகவேண்டும். பொதுவாக சபை அவளை விபச்சாரி என முத்திரை குத்த விரும்புவதனால் அவள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்களைச் சொல்லும் வரை சித்திரவதை நீளும்.

அவள் பெயர்களைச் சொன்னதும் அவளை இழுத்துவந்து தாழ்ந்த சாதியினருக்கு விற்கிறார்கள். அந்த தொகை அரசாங்க கஜானாவில் கட்டப்படும். அத்துடன் அவளுடைய சாதி அடையாளம் அழிந்துவிடும். வீட்டைவிட்டு வெளியேற்றியதும் அவளை இறந்தவளாக தீர்மானித்து உரிய இறுதிச்சடங்குகள் குடும்பத்தாரால்செய்யப்படும். இதற்கு ‘படியடைச்சு பிண்டம் வைத்தல்’ என்று பெயர். அவளை வாங்கியவன் அவளைக் கொண்டுசெல்வான்.

ஸ்மார்த்தவிசாரத்தில் பெயர்சுட்டப்பட்டவர்களைப்பற்றி மன்னருக்கு சொல்லப்படும். மன்னர் அவர்களுக்கு தண்டனை விதிப்பார். நாயர் சாதியைவிட தாழ்ந்தவர்கள் அதில் இருந்தால் உடனடியாக சிரச்சேதம் செய்யப்படுவார்கள். தலித்துக்கள் என்றால் கழுவேற்றப்படுவார்கள். நாயர்கள் பொதுவாக சாதிவிலக்குக்கும் நாடுகடத்தலுக்கும் ஆளாவார்கள். நம்பூதிரிகளுக்கு சாதிவிலக்குத் தண்டனை.

சாதிவிலக்குத்தண்டனை அளிப்பதற்கு முன்னர் நம்பூதிரிகளுக்கும் நாயர்களுக்கும் ஒரு ‘உண்மை கண்டறியும் சோதனை’ உண்டு. இதற்கு ‘கைமுக்கு’ என்று பெயர். சுசீந்திரம் கோயில் புகழ்பெற்ற கைமுக்கு மையமாக இருந்தது. திருவிதாங்கூரில் எங்கே ஸ்மார்த்த விசாரம் நடந்தாலும் கைமுக்கு நடப்பது சுசீந்திரத்தில்தான். இங்குள்ள செண்பகராமன் மண்டபத்தில் இது நிகழும். இதைப்பற்றி முனைவர் அ.கா.பெருமாள் ‘சுசீந்திரம் ஆலயவரலாறு’ என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொதுச்சபை முன் நிறுத்தப்படுவார்கள். பெரிய உருளியில் கொதிக்கவைத்த நெய்யில் கைவிட்டு உள்ளே இருக்கும் சிறிய பொற்சிலை ஒன்றை எடுக்க வேண்டும். கையில் தீக்காயம்படாவிட்டால் நிரபாராதி என்று தீர்ப்பாகும். தீக்காயம் பட்டால் உடனடியாக சாதிவிலக்கு அறிவிக்கப்படும். சாதிவிலக்கு பெற்றவர் பின்னர் தேவதாசி சாதியில் இணைந்துகொள்வதுதான் வழக்கம். பின்னர் இச்சடங்கில் கையில் துணிசுற்றிக்கொண்டு கொதிக்கும்நெய்யில் கைவிட்டால்போதும் என்ற மாற்றம் கொண்டுவரப்பட்டது. மகாராஜா சுவாதித்திருநாள் இந்த வழக்கத்தை நிறுத்தினார்.

1893 ல் திரிச்சூர் அருகே உள்ள வெங்கிடங்கு என்ற ஊரில் உள்ள வடவர்கோட்டு மனை என்ற நம்பூதிரி இல்லத்தில் பதினைந்து வயதான பருவம் வந்த நம்பூதிரிச்சிறுமி குளத்தில் குளித்துவிட்டு வந்துகொண்டிருந்தபோது அங்கே வேதமோதுதல் கற்பிக்க வந்திருந்த முதியவரான நம்பூதிரி [இவர்களுக்கு ஓதிக்கன் என்று பெயர்] அவள் கையைப்பிடித்து இழுத்து முத்தமிட முயன்றார். அவரைப் பிடித்துத் தள்ளியபின் ஓடிப்போன அந்தச்சிறுமி தன் அம்மாவிடம் தன்னை ஓதிக்கன் கைப்பிடித்து இழுத்துவிட்டதாகச் சொன்னாள்.

அக்குடும்பத்துப் பெண்களே அதை பெரிய ஒழுக்கமீறலாகக் கண்டு புகார்சொன்னார்கள். நம்பூதிரி நெறிகளின்படி அப்படி ஒருவரை கவர்ந்தது அப்பெண்ணின் பிழையாகும். ஆகவே ஸ்மார்த்த விசாரணை நடந்தது. அப்பெண் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு ‘குற்றங்களை’ ஒப்புக்கொண்டு பிரஷ்டம் செய்யப்பட்டாள். அவளை சாதியமைப்பில் மிகக்கீழ்நிலையில் இருந்த நாயாடிகள் என்ற பழங்குடியின் தலைவனனான கிழவன் பிடித்துச்சென்றான். நாயாடிகளை அன்று ஒரு உயர்சாதியினன் பார்த்தாலே அது தீட்டு என்று கருதப்பட்டது. எலிகளை வேட்டையாடி உண்பவர்கள் அவர்கள்.

அந்தப்பெண்ணின் அப்பா திருவிதாங்கூரில் அரசபதவியில் இருந்தார். அவளுடைய தாய்வீடுதான் வடவர்கோட்டு மனை. தன் மகளைக் காப்பாற்ற அவளுடைய தந்தை கடுமையாக முயற்சி எடுத்தார். திருவிதாங்கூரில் அதற்கு முன்னரே ஸ்மார்த்த விசாரம் தடைசெய்யப்பட்டிருந்தது. திருவிதாங்கூர் மன்னர் அப்பெண்ணுக்காக கொச்சி மன்னரிடமும் கோழிக்கோட்டு சாமூதிரிமன்னரிமும் வாதிட்டார். ஆனால் உச்ச அதிகாரம் கொண்ட நம்பூதிரிசபையை ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனால் அந்தப்பெண்ணை ஒரு போர்ச்சுக்கல் வணிகன் நாயாடிகளிடமிருந்து விலைக்கு வாங்கினான். அவன் அவளை மணம் புரிந்துகொண்டான். அவள் மதம் மாறி கிறித்தவப்பெண்ணாக ஆனாள். கெ.வி.வாசுதேவன் நம்பூதிரிப்பாடு என்பவர் பழைய ஆவணங்களில் இருந்து இவ்வரலாற்றை ஆராய்ந்து எழுதிய கட்டுரையில் இத்தகவல்கள் உள்ளன.

பொதுவாக ஸ்மார்த்த விசாரத்துக்கு ஆளான பெண்களின் பெயர்கூட கிடைப்பதில்லை. காரணம், அவள் குற்றம்சாட்டப்படும்போதே பெயர் நீக்கம்செய்யப்படுவாள். அதன்பின் அவளை ‘சாதனம்’ [சாமான்] என்றே குறிப்பிடுவார்கள். ஆனால் ஒருபெயர் மட்டும் வரலாற்றில் தீக்கனல் போல எரிந்துகொண்டிருக்கிறது. 1905ல் பாலக்காடு அருகே உள்ள குறியேடத்து மனையில் தாத்ரிக்குட்டி என்ற இளம்பெண் ஸ்மார்த்த விசாரணைக்கு ஆளாக்கப்பட்டாள். அவளை கேரள வரலாறு மறக்கவே முடியாது

மற்ற நம்பூதிரிப்பெண்க¨ளைப்போல அல்லாமல் குறியேடத்து தாத்ரிக்குட்டி கல்வி கற்றவள். சம்ஸ்கிருத காவியங்களில் அறிமுகம் உடையவள். இசைப்பயிற்சி உண்டு. கதகளி மீது அபாரமான பிரேமை இருந்தது. இளம்விதவையாக ஆன குறியேடத்து தாத்ரிக்குட்டி தன் இல்லத்தில் நடந்த கதகளிகளை ரகசியமாகக் கண்டுவந்தாள். அக்கலைஞர்களுடன் உறவு ஏற்பட்டது. கருவுற்றாள். ஆகவே அவள் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டாள்.

பொதுவாக, ஸ்மார்த்தவிசாரணைக்கு உள்ளாகும் பெண்கள் ஒருகட்டத்தில் நிறைய பெயர்களை வரிசையாகச் சொல்வதை ஆவணங்கள் காட்டுகின்றன. ஏனென்றால் அவளிடம் கடைசியாக எஞ்சியிருக்கும் அதிகாரம் அதுவே. அவள் எந்தப்பெயர்களையெல்லாம் சொல்கிறாளோ அவர்களெல்லாம் தண்டிக்கப்படுவார்கள். அவளுடைய வன்மம் அந்தக்கணத்தில் தன்னை அந்நிலைக்கு ஆளாக்கிய அனைவர் மேலும் பாய்கிறது. நிரபராதிகளும் தண்டிக்கப்படுகிறார்கள்.

குறியேடத்து தாத்ரிக்குட்டி செய்ததும் அதுவே. ஒட்டுமொத்த நம்பூதிரி சபையையே அவள் தன்னுடன் விபச்சாரம்செய்தவர்களாக அடையாளப்படுத்தினாள். 63 பிரபல நம்பூதிரி இல்லங்களைச் சேர்ந்த தலைமை நம்பூதிரிகள் அவளால் தண்டனைக்கு ஆளானார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதில் தொடர்பில்லை என்பது வெளிப்படை. ஆனால் வேறு வழியே இல்லை, ஆசாரத்தை எவரும் மீறமுடியாது. அவர்களில் பல நம்பூதிரிகள் கைமுக்கு சோதனைக்குப் பயந்து தற்கொலைசெய்துகொண்டார்கள். பிறரை சாமூதிரிமன்னர் சாதிபிரஷ்டம்செய்தார்.

குறியேடத்து தாத்ரிக்குட்டியின் கதை கேரள இலக்கியத்தில் உக்கிரமான பல படைப்புகளை உருவாக்கியது. ”அறுபத்துநாலாவது பெயரை தாத்ரிக்குட்டி சொல்லியிருந்தால் தீர்ப்பளிக்க ஆளிருந்திருக்காது” என்று ஒரு கவிஞர் பாடினார். தாத்ரிக்குட்டி ஒரு கதகளிக் கலைஞனை கதகளிக் கதாபாத்திர வேடத்திலேயே இரவில் தன்னிடம் வரச்சொன்னாளாம். ”அவளுடைய காமம் கலையுடன்தான், அவள் புணர்ந்தது பீமனையும் அர்ஜுனனையும்தான், மனிதர்களையல்ல” என்று அவளைப்பற்றி தான் எழுதிய ஒரு கதையில் எம்.கோவிந்தன் சொல்கிறார்.

மாடம்பு குஞ்சுக்குட்டன் என்ற எழுத்தாளர் குறியேடத்து தாத்ரிக்குட்டியைப் பற்றி 1974ல் ‘பிரஷ்டு’ என்ற பிரபலமான நாவலை எழுதினார். அந்நாவல் 1975ல் ஒரு திரைப்படமாக அதே பேரில் வெளிவந்தது. அதில் புதுமுகமாக அறிமுகமான சுஜாதா அக்காலகட்டத்தில் மிகத்துணிச்சலாக நடித்திருந்தார். பிற்பாடு அவர் கெ.பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ மூலம் தமிழில் பிரபலமாக ஆனார்.

2002 ல் எம்டி.வாசுதேவன்நாயர் எழுதி ஹரிஹரன் இயக்கிய ‘பரிணயம்’ என்ற முக்கியமான திரைப்படம் வெளிவந்தது. இது தாத்ரிக்குட்டியின் கதையை ஒட்டி இன்னும் விரிவாகவும் தீவிரமாகவும் ஸ்மார்த்த விசாரச் சடங்கைச் சித்தரிக்கிறது. மோகினி தாத்ரிக்குட்டியாக நடித்திருந்தார். ஸ்மார்த்தனாக திலகனும் தாத்ரிக்குட்டியின் குடும்ப மூத்தாராக நெடுமுடிவேணுவும் நடித்திருந்தார்கள். இதில் கதை இன்னும் இருபதாண்டுக்காலம் பின்னுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. தாத்ரிக்குட்டிக்கும் ஒரு கதகளி நடிகனுக்கும் இடையேயான உறவை மட்டுமே இது பேசுகிறது.

தாத்ரிக்குட்டி என்ன ஆனார்? திரிச்சூரைச்சேர்ந்த ஒரு ஆங்கிலோ இந்தியக் கிறித்தவர் அவளை ஏலத்தில் விலைகொடுத்து வாங்கி மணம்புரிந்துகொண்டார். கேரளத்தில் அவளுடன் வாழமுடியாமல் தமிழகத்துக்கு வந்தார். திருச்சி அருகே பொன்மனை ரயில்தொழிற்சாலையிலும் பின்னர் சென்னையிலும் அவர் வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. அவரது வாரிசுகள் பலவாறாகச் சிதறிப்பரந்தாலும் சில தகவல்கள் அங்கிங்காகக் கிடைக்கின்றன. அவர்களில் ஒரு பெண் இன்றுமிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

தாத்ரிக்குட்டியின் பிரஷ்டு அதிர்ச்சியலைகளை உருவாக்கி ஸ்மார்த்த விசாரணை என்ற அமைப்பின் அடித்தளத்தை உலுக்கியது. என்றாலும் ஸ்மார்த்த விசாரம் தொடர்ந்து நடந்தது. 1918 ல் நடந்த ஒரு ஸ்மார்த்த விசாரணையைப்பற்றி கேரள பல்கலைக் கழகத்தின் பதிவாளராக பணியாற்றிய ஏ.எம்.என் சாக்கியார் தன் சுயசரிதையில் சொல்கிறார். இதில் குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணன் நம்பூதிரி தற்கொலைசெய்துகொண்டார். அவர் ஏ.எம்.என் சாக்கியாரின் தந்தை. ஒருவேளை அதிகாரபூர்வமாக அதுதான் கடைசி ஸ்மார்த்த விசாரணையாக இருக்கலாம். அந்தப்பெண்ணின் பெயரும் தாத்ரிக்குட்டிதான். வாடானப்பள்ளி ஊரைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் வணிகர் அவளை விலைகொடுத்து வாங்கினார்.

ஏ.எம்.என் சாக்கியார் தான் தன் சுயசரிதையில் 1903ல் மேலங்கத்துக் கோபால மேனன் சாதிப்பிரஷ்டத்துக்கும் நாடுகடத்தலுக்கும் ஆளான ஸ்மார்த்த விசாரத்தைப்பற்றி விவரிக்கிறார். கோபாலமேனன் கொழும்புவுக்குச் சென்றார். அக்காலத்தில் தோட்டத்தொழில் உருவாகிக்கொண்டிருந்த இலங்கைக்கு ஏராளமான மலையாளி நாயர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் காலப்போக்கில் அங்குள்ள வேளாளர்களுடன் கலந்து மறைந்தார்கள். கொழும்புசென்ற கோபாலமேனன் அங்கிருந்து கண்டிக்குச் சென்றார்.

நிரபராதியான கோபால மேனன் தன் மீது வந்த பழியினால் மனம் உடைந்து இருந்ததாகவும் அதனால் நோயுற்றதாகவும் சொல்லப்படுகிறது. அங்கே அவர் சத்யவதி என்ற இன்னொருபெண்ணை மணந்துகொண்டார். அவருக்கு இரு குழந்தைகள் பிறந்தன. நோய் முற்றி மேலங்கத்து கோபாலமேனன் இறந்தார்.

மேலங்கத்து கோபாலமேனனின் மனைவி தன் இரு குழந்தைகளுடன் இந்தியா வந்தார். பிழைக்க வழியில்லாமல் பரிதவித்து தன் பிள்ளைகளை நாடகக் கம்பெனியில் சேர்த்தாள். அக்குழந்தைகள் நாடகநடிகர்களாகவும் பின்னர் திரைப்பட நடிகர்களாகவும் வளர்ந்தன. இளையவர் நட்சத்திர நடிகராக ஆகி பின்னர் தமிழ்நாட்டு முதலமைச்சராக ஆனார். மேலங்கத்துக் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர்.

சரி,தாத்ரிக்குட்டியின் வாரிசாக கருதப்படும் பெண்? அவரும் சினிமா நடிகைதான். இருநூறுக்கும் மேற்பட்ட மலையாளப்படங்களில் நடித்த ஷீலா. ஆனால் இது உறுதிப்படுத்தப்படாத தகவல்.

Monday, December 8, 2008

Serve the poor...speech by jeyamohan

வைரம்
December 6, 2008 – 12:38 am


மதிப்பிற்குரிய அவையினரே,

சென்ற செப்டெம்பரில் நான் நண்பர்களுடன் ஆந்திரத்தில் உள்ள நல்கொண்டா என்ற ஊருக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்து அருகே உள்ள பன்னகல் என்ற சிற்றூருக்குச் சென்று அங்குள்ள காகதீயபாணி கோயிலைப் பார்த்தோம். பச்சன சோமேஸ்வர் கோயில். அங்கே அதேபோல இன்னொரு கோயில் அருகே இருக்கும் தகவலைச் சொன்னார்கள். ஆகவே காரில் கிளம்பிச்சென்றோம்.

பத்துகிலோமீட்டர் தூரம்சென்றபின்னர் விரிந்த கரும்புவயல்நடுவே அந்தக்கோயிலின் முகடு தெரிந்தது. உள்ளே சென்றோம். முகப்பு இடிந்த கோயில் அது. பக்தர்கள் வரக்கூடிய கோயில் அல்ல. தொல்பொருள்துறை பாதுகாப்பில் இருந்தது. கோயிலுக்குள் ஒரு சிறுவன் இருந்தான். அஜய்குமார் என்று பெயர். அவன் அங்கே பூசாரி. பக்கத்து கிராமத்தில் இருந்து சைக்கிளில் வந்து பூஜை செய்துவிட்டு திரும்பிச்செல்கிறான்.

அஜய்குமார் எங்களை மையக்கருவறைக்குக் கொண்டுசென்றான். அதற்குள் மூலவிக்ரகம் இல்லை. சுதைபூசிய வெண்சுவர்தான். அவன் உள்ளே படிகள் இறங்கிச் சென்று ஆழத்தில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் இருபக்கங்களிலும் விளக்குகளைக் கொளுத்தியபோது லிங்கத்தின் நிழல் எழுந்ந்து சுவரில் விழுந்தது. அதுதான் அங்கே மூலவிக்ரகம். சாயா சோமேஸ்வர்.

ஒரு ஆழ்மன அதிர்வை உருவாக்கும் காட்சி அது. சாயாசோமேஸ்வரைப் பார்த்தபோது எண்ணிக்கொண்டேன், இலக்கியம் என்பது அதுதான் என்று. அது ஒரு நிழல். ஆழத்தில் உள்ள லிங்கம்தான் மெய்ஞானம். இரு சுடர்களும் கற்பனைகள். வெண்சுவர்தான் மொழி. பலகோணங்களில் நான் விரிவுசெய்துகோண்டே இருந்த ஒரு கவியுருவகம் அது. கண்முன் நின்று நடுங்கும் அந்த நிழலை பல்லாயிரம் பக்தர்கள் வழிபடலாம். அதற்கு பூஜையும் ஆராதனையும் அளிக்கப்படலாம். அவற்றைப்பெறுவது உள்ளே உள்ள லிங்கம் அல்லவா?

இன்னொன்றும் தோன்றியது, அந்த நிழல் மிகவும் தற்காலிகமானது என்று நமக்குத் தோன்றுகிறது. சுடர்போலவே அது தத்தளிக்கிறது. ஆனால் உள்ளே இருக்கும் லிங்கம் அளவுக்கே அதுவும் உறுதியானது, நிரந்தரமானது. ஆம் நண்பர்களே, எழுதும்போது, இலக்கிய ஆக்கத்தின் உச்சநிலையில், நான் எப்போதும் உணரக்கூடிய ஒன்று உண்டு. இலக்கியம் என்பது எதுவாகத் தென்படுகிறதோ அது அல்ல. எதுவாக விவாதிக்கப்படுகிறதோ அது அல்ல. அது அதைவிட மேலான, மகத்தான, ஒன்றின் பிரதிநிதி.

சற்றுநாட்களுக்கு முன் ‘தி ஹிண்டு’ ஞாயிறு இதழில் ஒரு பிரிட்டிஷ் பிரசுரகர்த்தரின் பேட்டி இருந்தது. அவர் அவரது பிரசுர நிறுவனம் விற்கும் நூல்களில் எக்காலத்திலும் தொடர்ச்சியாக அதிக விற்பனையில் இருப்பவை லியோ தல்ஸ்தோயின் நாவல்கள் என்று சொன்னார். முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் பின்னர் ஆச்சரியத்திற்கு இடமில்லை என்றும் தோன்றியது. தமிழில் இப்போதுதான் அன்னா கரீனினா முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு முன் பல வடிவங்களில் அந்நாவல் வெளிவந்திருக்கிறது. உலகம் முழுக்க தல்ஸ்தோய் நாவல்களுக்கு புதிய மொழியாக்கங்கள் வந்தபடியே இருக்கின்றன. புதிய தலைமுறை அவரை படித்துக்கொண்டேதான் இருக்கிறது

ஏன்? அவரது நடை இன்று பழையதாகிவிட்டது. மிக சாவகாசமாக கதைசொல்லும் பாணி இன்று பின்னகர்ந்துவிட்டது. அனைத்துக்கும் மேலாக அவர் பேசிய சமூக,அரசியல் சூழல் இன்று இல்லை. அவர் முன்வைத்த வாழ்க்கைச்சிக்கல்களே வரலாற்றுத்தகவல்கள்தான் இன்று. ஆனாலும் அவர் இன்றும் படிக்கப்படுகிறார். ஏன்?

ஒருநாளும் அழியாத ஒன்று தல்ஸ்தோயின் ஆக்கங்களுக்குள் உள்ளது. அதை மெய்ஞானம் என்று சொல்வது என்னுடைய வழக்கம். மானுடவிவேகம் சென்றடைந்த உச்சகட்ட தளங்களை அவரது நூல்களில் நாம் மீண்டும் மீண்டும் காண்கிறோம். தல்ஸ்தோய் படைப்புகளை நான் இப்படி வரையறைசெய்வேன். மிகக்கறாரான லௌகீகவிவேகம் மிக அருவமான மானுட அறத்தைச் சென்று தொட்டு அள்ளி எடுப்பதன் மொழித் தருணங்கள் அவை.

நண்பர்களே,பலசமயம் அவை மிக மிக எளியவை. அறிவார்ந்த சிக்கல்களுக்கு இடமே இல்லாத தெளிந்த வாழ்க்கைப்புள்ளிகள். கு.அழகிரிசாமி என்ற தமிழ் படைப்பாளி தல்ஸ்தோயின் உலகுக்குள் செல்லும் கடவுச்சீட்டு கையில் வைத்திருந்தவர். அவரது புகழ்பெற்ற கதை ஒன்றுண்டு.

சிறுகுழந்தைகள் பள்ளிவிட்டு வரும் சித்திரத்துடன் கதை தொடங்குகிறது. முத்தம்மாள் தன் அண்ணனுடன் ஒரு கட்சி. மறுபக்கம் உள்ளூர் பண்ணையாரின் மகன். அவரவர் புத்தகத்தை பிரித்து அதில் உள்ள படம் மறுதரப்பின் புத்தகத்தில் இருக்கிறதா என்று பார்க்கும் போட்டிதான் விளையாட்டு. ”என் புக்கிலே மயில் இருக்கே” என்கிறான் பண்ணையார் பையன். ”என் புக்கிலே ஒட்டகம் இருக்கே” என்று முத்தம்மாள் சொல்கிறாள். ”என் புக்கிலே ரயில் இருக்கே” என்று பண்ணையார் மகன் சொல்ல ”என் புக்கிலே லாரி இருக்கெ” என்கிறாள் முத்தம்மாள்.

கடைசியில் பண்ணையார் மகன் ”என் புக்கிலே ஆனை இருக்கே”என்னும்போது முத்தம்மாள் அவளுக்கே உரிய முறையில் கையை நீட்டி ”அய்யே, என் புக்கிலே குர்தை இருக்கெ”என்று சொல்கிறாள். பண்ணையார் மகன் தோற்று ஓடுகிறான்.

குழந்தைகள் வீடு திரும்புகின்றன. மறுநாள் தீபாவளி. முத்தம்மாவின் பெற்றோர் பரம ஏழைகள். ஒருவாறாக பணம் திரட்டி இரு குழந்தைகளுக்கும் புத்தாடை எடுத்து வைத்திருக்கிறாள் அவர்களின் அம்மா. அவளுக்கு புத்தாடை இல்லை. அப்பாவுக்கும் புத்தாடை இல்லை. புதிதாக ஏதாவது வேண்டுமே என்பதற்காக ஒரு துண்டு மட்டும் அவருக்கு வைத்திருக்கிறாள். தின்பண்டம்செய்ய ஏதோ கொஞ்சம் சாமான்கள் தேற்றி வைத்திருக்கிறாள்.

தீபாவளிக்கு முந்தைய இரவு அவர்கள் சாப்பிட்டுவிட்டு இலையை வெளியே போடும்போது ஒரு சொறிபிடித்த பையன் அந்த எச்சில் இலையை எடுத்து வழித்து தின்கிறான். அம்மா அதைக்கண்டு மனம் உருகி அவனை உள்ளே கூப்பிடுகிறாள். அவன் ஒரு அனாதைப்பையன். அப்பா அம்மா செத்துப் போனபின்னர் தெரிந்தவர் வீட்டில் இருந்தவன் அவர்களால் துரத்தப்பட்டு கோயில்பட்டியில் இருக்கும் வேறு சொந்தக்காரர் வீட்டுக்கு பல நாட்களாக நடந்தே சென்றுகொண்டிருக்கிறான். அவன் பெயரென்ன என்று அம்மா கேட்க அவன் ”ராஜா” என்று சொல்கிறான்

அவனை தன்னுடனேயே இருக்கச்சொல்கிறாள் அம்மா. தீபாவளி காலையில் அவனையும் எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டிவிடுகிறாள். அவன் அதே கந்தலைக் கட்டிக்கொண்டு நிற்பதைக் கண்டு அவனுக்கு அப்பாவுக்கு வைத்திருந்த புது துண்டை எடுத்துக் கொடுக்கிறாள். அவர்கள் விளையாடச்செல்கிறார்கள்.

பண்ணையார் வீட்டில் தலைத்தீபாவளிக்குப் புதுமருமகன் வந்திருக்கிறார். அவன் ஒரு ஜமீந்தார் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆகவே அவனை எல்லாரும் ராஜா என்கிறார்கள். பண்ணையார் மகன் துள்ளிக்குதித்தபடி ஓடிவருகிறான். ”எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறாரே”என்று கூவுகிறான். முத்தம்மாள் அதை பழைய விளையாட்டாக எடுத்துக்கொண்டு, அவள் தன் பாணியில் கையை நீட்டி ”அய்யே , எங்க வீட்டுக்கும்தான் ராஜா வந்திருக்கிறார்” என்கிறாள்.

அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற இந்தக்கதை அதன் எழுதுமுறை,நடை அனைத்தாலும் பழையதாக ஆகிவிட்டது. ஆனால் இன்றும் ரத்தினக்கல் போல கூரிய ஒளிவிட்டபடி நம் முன் நிற்கிறது இது. இக்கதையை அமரத்துவம் வாய்ந்த இலக்கிய ஆக்கமாக ஆக்குவது எது?

ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் என்ற புகழ்பெற்ற அமெரிக்க மதபோதகர் ஒருமுறை கடற்கரைக்குச் சென்றார். அங்கே மேரி என்ற சிறுமியுடன் கொஞ்சநேரம் விளையாடினார். குழந்தையின் பெற்றோருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி இருக்கட்டுமே என்று அவர் அதனிடம் இபப்டிச் சொன்னார் ”நீ வீட்டுக்குப் போனதுமே உன் அம்மாவிடம் நான் ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ¤டன் விளையாடினேன் என்று சொல்லு என்ன?”

குழந்தை சொன்னது ”சரி…நீயும் வீட்டுக்குப்போய் உன் அம்மாவிடம் நான் மேரியிடம் விளையாடினேன் என்று சொல்லு” ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் தன் போதனை அனைத்துக்கும் சாரமாக பலசமயம் மேற்கோள் காட்டும் கதைத்துணுக்கு இது.

வாழ்க்கைக்கு முன் அனைத்தும் சமம் என்ற ஞானம் நம் மனத்தின் ஆழத்தில் அமைதியான அழுத்தமாக நிலைத்திருக்கிறது. மேல்மட்டத்தில்தான் நாம் அறியும் பேதங்களின் அலைகள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. சமத்துவத்தின் மானுடமெய்ஞானம் நம் முன் வைக்கப்பட்டதுமே நமது ஆழம் அதை அடையாளம் கண்டு கொள்கிறது.

தல்ஸ்தோயின் குட்டிக்கதை ஒன்றில் செருப்பு தைக்கும் செம்மானைத்தேடி ஏசு வருவதாகச் செய்தி வருகிறது. செம்மான் அவருக்காக உணவும் பானமும் வைத்து காத்திருக்கிறான். ஆனால் அந்த உணவையும் பானத்தையும் அவன் பனியில் சோர்ந்த தெருக்கூட்டுபவனுடன் பகிர்ந்துகொள்கிறான்.

மாலைவரை ஏசு வரவில்லை. ஆனால் செம்மான் இரவில் பைபிளை எடுத்து அவன் பிரிக்கும்போது ஒரு வசனம் பொன்னெழுத்துக்களில் மின்னுகிறது. ‘என் சகோதரரில் கடைக்கோடியினனுக்கு நீ செய்தது எனக்கே செய்ததாகும்’.

நண்பர்களே, இவ்வாறு அழகிரிசாமியின் இந்தக்கதையின் மீது வந்து படியும் நூறு நீதிக்கதைகளை நான் இப்போது சொல்லமுடியும். மகாபாரதத்தின் ஒரு கதை. தன் செல்வத்தை முழுக்க தானம்செய்யும் தருமனின் விருந்துக்கூடத்துக்கு வந்து எச்சில் இலைகள் மீது படுத்துப்புரள்கிறது ஒரு கீரி. அதன் பாதி உடல் பொன்னாக இருக்கிறது. தருமன் அதனிடம் ‘நீ செய்வதென்ன?’ என்று கேட்கிறார்

‘மாபெரும் கொடையாளி ஒருவன் அளித்த அன்னதானத்தில் அந்த எச்சில் இலையில் படுத்து நான் புரண்டேன். என் பாதி உடல் பொன்னாக ஆகியது. அவனுக்கு நிகரான ஒருவனைத் தேடி கண்டடைந்து மீதி உடலையும் பொன்னாக்க முயல்கிறேன், காணமுடியவில்லை’ என்கிறது கீரி

தன்னைவிட பெரிய கொடைச்சக்கரவர்த்தி யார் என்று தர்மன் வியக்கிறான். அதை விசாரித்துச் செல்கிறான். ஆனால் அவன் ஒரு சக்கரவர்த்தி அல்ல. தன் எளிய, கடைசி உணவையும் மனமுவந்து விருந்தினனுக்குத் தானம் செய்த ஓர் ஏழைப்பிராமணன்தான் அவன்.

அதைத்தானே நாம் பைபிளிலும் கண்டோம்? ஏதாவது ஒரு வடிவில் இந்தக்கதை இல்லாத மதமோ இலக்கியமோ உண்டா? சீனத்துக் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. எந்த மெய்ஞானத்துக்கும் ஒரு சீன ஊற்றுமூலம் இருந்தாகவேண்டுமே?

சீனச்சக்கரவர்த்தி தன் சபையில் ஒருவரின் இல்லத்துக்கு வருடத்துக்கு ஒருமுறை விருந்துக்குச் செல்வதுண்டு. மானுடத்தின் முக்கால்பங்கை ஆட்சி செய்பவரின் வருகை அல்லவா? மண்ணில் வாழும் இறைவடிவமல்லவா அவர்? அவரை உபசரிக்க அந்த நபர் தன் செல்வத்தை முழுக்கச் செலவிடுவார். அந்த ஊரே அவருக்கு முன் தங்கள் செல்வங்களைக் கொண்டுவந்து குவிக்கும். அது ஒரு மாபெரும் திருவிழாவாக இருக்கும்.

அந்தச் சீனச்சக்கரவர்த்தி அவ்வாறு ஒருவரின் இல்லத்துக்கு விருந்துக்குச் செல்கிறார். வழியில் ஒரு ஞானியைப்பார்க்கிறார். ஞானிக்கு பிற உயிர்களின் மொழி தெரியும். ‘இந்த எறும்புகள் என்ன சொல்கின்றன என்று கேட்டுச்சொல்லுங்கள்’ என சக்கரவர்த்தி ஆணையிடுகிறார்.

ஞானி எறும்புகளைக் கேட்டுவிட்டு ‘அவை சக்கரவர்த்தியின் வரவேற்புக்குச் சென்றுகொண்டிருக்கின்றன’ என்று சொல்கிறார் ‘ஒரு மாபெரும் சக்கரவர்த்தியின் விருந்தில் சிதறும் உணவை அவை உண்ண விரும்புகின்றன’

சக்கரவர்த்திக்கு தலைகொள்ளாத உவகை. அவருக்காக எறும்புகளின் உலகமே திரண்டுவருகிறதே? ஆனால் பின்னர் அவர் கவனிக்கிறார் எறும்புகளின் வரிசை செல்லும் திசையே வேறு.

”என்ன இது?”என்று சக்கரவர்த்தி கோபம் கொள்கிறார். ஞானி கூர்ந்து கேட்டுவிட்டு ”சக்கரவர்த்தியே, எறும்புகள் சரியான இடத்துக்குத்தான் செல்கின்றன. அவர்களில் ஞானியான முதிய எறும்புதான் அவற்றை இட்டுச்செல்கிறது” என்று சொல்கிறார். வியப்படைந்த சக்கரவர்த்தி தன்னைவிடப்பெரிய சக்கரவர்த்தி யார் என்று அறிய தன் பரிவாரங்களை தவிர்த்து சாதாரண மனிதனாக வேடமிட்டு ஞானியுடன் அவ்வெறும்பு வரிசையைப் பின் தொடர்ந்து செல்கிறார்

அவை சென்று சேருமிடம் ஒரு பிச்சைக்காரனின் தெருவோரக்குடிசை. அவன் அன்றைய பிச்சை உணவைச் சமைத்துக்கொண்டிருக்கிறான். அப்போது பசித்துச் சோர்ந்த இன்னொரு முதிய பிச்சைக்காரன் தள்ளாடி வந்து அந்த குடில்முன் விழுகிறான். பிச்சைக்காரன் அந்த முதிய பிச்சைக்காரனை தூக்கி எழுப்பி அவன் கைகால்களை கழுவி தன் வைக்கோல் படுக்கையில் அமரச்செய்து தன் மொத்த உணவையும் சூடாக அவனுக்கு பரிமாறுகிறான். அருகே நின்று மெல்ல விசிறுகிறான்

எறும்புகள் கூட்டம்கூட்டமாக அதன் சிதறல்களை உண்கின்றன. ஞானி குனிந்து அவற்றில் ஞானி எறும்பிடம் கேட்டுவிட்டு சக்கரவர்த்தியிடம் விளக்குகிறார். ”சக்கரவர்த்தியாக விருந்துக்குச் செல்பவன் அல்ல, சக்கரவர்த்தியாக வரவேற்கப்படுபவனே உண்மையான சக்கரவர்த்தி”

சீனச்சக்கரவர்த்தி கண்ணீர் மல்கி அந்த பிச்சைக்காரன் கால்களில் விழுந்து பணிந்தார் என்று கதை சொல்கிறது. நண்பர்களே, அதே மெய்ஞானம் அல்லவா அழகிரிசாமியின் கதைகளிலும் உள்ளது? அதுதானே அந்தக்கதையை நித்யநூதனமாக –என்றும் புதிதாக– ஆக்கியிருக்கிறது?

ஆனால் அந்த மெய்ஞானம் எத்தனை பழையது? அந்த மெய்ஞானம் இல்லாத ஒரு பழங்குடிச்சமூகம் கூட பூமிமீது இருக்க முடியாது. மனிதன் தன்னை ஒரு விலங்கல்ல என்று உணர்ந்த மறுகணமே உணர்ந்த ஞானங்களில் ஒன்றாக அது இருக்கக் கூடும். பகிர்ந்துண்ட முதல் மனிதனே மனிதப்பண்பாட்டை உருவாக்க ஆரம்பித்தவன். அந்தக்கணத்தில் சட்டென்று மனிதன் பூமியின் அதிபனாக ஆனான். விண்ணகங்களின் ஆசியனைத்தையும் பெற்றவன் ஆனான்

அந்தத்தருணத்தைத்தான் மேலே சொன்ன எல்லா கதைகளுமே தொட முயல்கின்றன. ஆம் நண்பர்களே, அழிவிலாத ஒன்று அன்றாடம் அலைவுறும் மொழியில் தன்னை பதியவைப்பதற்குப் பெயரே இலக்கியம். அதிபுராதனமான சிலவற்றை என்றும் புதிதாக நிலைநிறுத்தும் ஓயாத செயல்பாட்டின் பெயரே இலக்கியம்.

நிழலுக்கு உள்ளே கருமையின் முடிவிலாத தொன்மையுடன், கல்லின் உறுதியுடன் லிங்கம் இருந்தாகவேண்டும். மென்மையான நிழலுக்குள் இருக்கும் வைரம் அதுதான்.

நன்றி

[23-11-2008 அன்று கேரளத்தில் திரிச்சூர் அருகே கடவல்லூர் அன்யோனிய பரிஷத் மேடையில் ஆற்றிய உரை]