Wednesday, December 3, 2008

hitler and devil

ஹிட்லர் கடைசியில் வீழ்ந்தார், ஆனால் அவரை வீழ்த்தியவர்கள் மானுட அறத்தின் பேரால் அவரை வீழ்த்தவில்லை. தங்களை வெல்லவரும் தங்களைப்போன்ற ஒரு பூதம் என்று அவரை மதிப்பிட்டதனாலேயே அவர் அழிக்கப்பட்டார். அவரை வென்ற அமெரிக்கா ஜப்பானில் அப்பாவி மக்கள் மேல் அணுகுண்டை வீசி ஹிட்லர் ஐந்துவருடத்தில் செய்த அந்த பெரும்படுகொலையை ஐந்தே நிமிடத்தில் செய்தது. ருஷ்யா அதற்க்குப்பின் மேலும் ஐம்பதுவருடம் கட்டாய உழைப்புமுகாம்களை வைத்திருந்தது. அதைவிட அதிகமான எளிய மக்களை அங்கே கொண்டுசென்று கொன்று ஒழித்தது.
ஆம், கடவுளும் கடவுளின் பிரதிநிதியும் மட்டுமல்ல மானுடமனசாட்சி என்று சொல்கிறோமே அதுவும்தான் மௌனமாக இருந்தது. மானுடத்தின் சாரமான அற எழுச்சி யூதர்களைக் காக்க வரவில்லை என்ற உண்மை கண்முன் மலை போல நின்றதைக் கண்டபின்னரே உலகில் இருத்தலியல் பிறந்தது.

No comments: