மனிதாபிமானம் என்பது ஒருவன் தனிமனிதனாக தன் அந்தரங்கத்தில் உணரக்கூடிய ஒன்று. மனிதர்கள் தனிமனிதர்களாக மட்டுமே தங்கள் ஆன்மீக ஆழத்தைக் கண்டடையவும் தங்கள் முழுமையையும் மீட்¨ப்பம் அடையமுடியும் என்று சொல்லும் நித்யா கூட்டான மக்கள்திரள் என்பது லௌகீகமான சுயலாபத்தை அடைவதற்கு மட்டுமே உரியது என்று சொல்கிறார்.
பொருத்தமான உதராணமாக எனக்குத்தோன்றுவது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஹிட்லரின் யூதப்படுகொலைகள் பற்றி அவருக்கு முற்றிலும் தெரியாதென இப்போது சொல்லப்படுகிறது. அது பொய். பல ஆவணங்களில் அவருக்கு அதுதெரியும் என்றும் ஆனால் பொருட்படுத்தவில்லை என்றும் தெளிவாக தெரிகிறது. மேலும் ஜப்பானியர்கள் சீனாவிலும் தைவானிலும் பிலிப்பைன்சிலும் சயாமிலும் நடத்திய கொலைவெறியாட்டத்தை அவர் நேர்சாட்சியாகவே கண்டார். ஆனால் அவர் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
காரணம் அவரது இலட்சியம் இந்திய விடுதலை.பலம் பொருந்திய பிரிட்டிஷாரை வெல்ல அந்த சமரசம் தேவை என்று அவர் எண்ணினார். கம்யூனிஸ்டுகளை வெல்ல ஹிட்லர் தேவை என பாப்பரசர் எண்ணியதுபோல. ஆகவே அவர் ஹிட்லரின் உளவுத்துறையின் உதவியை ஏற்றுக்கொண்டார். அவர்கள் உதவியுடன் தப்பி ஜெர்மனியில் ஹிட்லரின் விருந்தினரானர். ஜப்பானின் நண்பரானார். ராணுவ ஒத்துழைபபளரானார். இந்தச் சந்தர்ப்பங்களில் அவர் நேரில் அறிந்த மானுடப்படுகொலைகளுக்குமுன் நேதாஜி மௌனத்தையே கடைப்பிடித்தார்.
ஆனால் பிரிட்டிஷாருக்கு எதிராக கடைசிப்போராட்டத்தை நடத்தியபோதிலும்கூட காந்தி ஹிட்லரை ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தனைக்கும் காந்திக்கு ஹிட்லர் செய்துவந்த இனப்படுகொலைகளைப்பற்றி ஒன்றும் தெரியாது. அவரது மனசாட்சி ஹிட்லரை ஏற்றுக்கொள்ள மறுத்தது. அதற்காக அப்போது காந்தி காங்கிரஸ்காரர்களால் கடுமையாக வசைபாடப்பட்டதுண்டு.
ஆனால் அந்த மனசாட்சியால்தான் பெரும் வரலாற்றுப் பாவத்தின் கறை இல்லாமல் இந்தியா என்ற நாடு உருவாக முடிந்தது. சுபாஷ் சந்திரபோஸ் அமைப்புமனிதராக சிந்தனைசெய்தார். காந்தி அவரது அனைத்து முடிவுகளையும் அமைப்புக்கு அப்பால்சென்று தனிமனிதராக முடிவுசெய்தார். ஆகவே சுபாஷிடம் இருந்த தர்க்கத்தெளிவு காந்தியிடம் இருக்கவில்லை. ஆனால் சுபாஷிடம் இல்லாத மனசாட்சியின் குரல் இருந்தது.
இந்த விஷயத்துக்கு தொடர்ச்சியாகச் சொல்லப்பட வேண்டியது யூதர்களின் பிற்கால வரலாறு. அது இந்நாடகத்தை எழுதிய ரால்·ப் ஹொஷ¥த் ஊகித்திருக்க முடியாத விஷயம். யூதர்கள் கடும் அடக்குமுறைக்கும் இன ஒதுக்குதலுக்கும் உள்ளானார்கள். ஆகவே அவர்கள் பின்பு அமைப்பாகத்திரண்டார்கள். தங்களுக்கான நாடு ஒன்றை உருவாக்கினார்கள். ஆனால் அவர்கள் அகிம்சையையோ மனிதாபிமானத்தையோ நம்பும் நாடாக உருவாகவில்லை. பிறர்மீது அடக்குமுறையை ஏவ சற்றும் தயங்காத நாடாகவே உருப்பெற்றிருக்கிறார்கள். அமைப்புமனிதர்களால் அழிக்கப்பட்டவர்கள் அமைப்பு மனிதர்களாக ஆனார்கள்.
கார்ல் ஜாஸ்பெர்ஸ் இந்த நாடகத்தைப்பற்றி விரிவாகவே ஆராய்ந்திருக்கிறார். ‘குற்றகரமான மௌனம்’ என்ற அவரது பிரபலமான கோட்பாடு இந்நாடகத்தைப்பற்றிய ஆராய்ச்சியில் இருந்து உருவானதே. அநீதிக்கு முன் எதிர்த்துப்போராடாமல் மௌனம் சாதிப்பதும் அநீதியே ஆகும் என்று கார்ல் ஜாஸ்பெர்ஸ் வாதிடுகிறார். அநீதி ஒருவேளை வெல்லப்படாது போகலாம், ஆனால் எதிர்க்கப்படாத அநீதி என்பது நிறுவப்பட்ட அநீதியாகும். வெல்லப்படாத அநீதி நிகழ்காலத்தை அழிக்கக்கூடியதென்றால் எதிர்க்கப்படாத அநீதி எதிர்காலத்தையும் அழிக்கக்கூடியது.
இந்நாடகத்தை ஒட்டி சிந்திக்கும்போது இன்று இன்னொரு சிந்தனையும் மனதில் எழுகிறது. ஹிட்லரின் இன அழித்தொழிப்பு, அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சு, ருஷ்யாவின் குளக்குகள் அழிப்பு ஆகியமூன்றில் எது கொடுமையானது? மூன்றுமே மாபெரும் மானுட அழிவுகள்தானே? இந்நாடகத்தில் வரும் அந்த டாக்டரைப்போன்றவர்கள்தானே அணுகுண்டை தயாரித்த அறிவியலாளர்கள்? ஐம்பதுவருடம் ருஷ்யாவின் மானுடப்படுகொலையை நியாயப்படுத்திய நம்முடைய இடதுசாரிக் கோட்பாட்டாளர்கள்?
இதேபோல பெரும் படுகொலைகள் கிழக்கில் நடந்துள்ளன. சீனாவில் ஜப்பானிய ராணுவம் நடத்திய நான்கிங் படுகொலைகள் ஓர் உதாரணம். அதுவாவது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பல்லாயிரம் தமிழர்கள் கொன்றழிக்கப்பட்ட ‘சயாம் மரண ரயில்பாதை’ போன்ற நிகழ்ச்சிகள் வரலாற்றில் இடம்பெறவேயில்லை.
ஆனால் யூதப்படுகொலை மட்டும் பேரழிவாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. அதைப்பற்றி மீண்டும் மீண்டும் எழுதப்படுகிறது. திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. யூதர்களைக் கொன்ற நாஜிகளை நாம் மீண்டும் மீண்டும் வெறுக்கிறோம். அணுகுண்டு வீசிய அமெரிக்கர்களை மறந்தே விட்டோம். ஏன்? காரணம் ஒன்றுதான் போரில் ஹிட்லர் தோற்றார். வென்றவர்கள் எழுதிய வரலாறு நாம் படிப்பது
ஹிட்லர் வென்றிருந்தால் என்ன ஆகும்? யூதப்படுகொலைகள் வரலாற்றில் இருந்து மறைந்து போயிருக்குமா? இருக்காது. ஆனால் இன்றுள்ள இந்த முக்கியத்துவம் இன்றி புதைந்து கிடந்திருக்கும். அறிவுஜீவிகளும் வரலாற்றாசிரியர்களும் அதை நியாயப்படுத்தியிருப்பார்கள். பாப்பரசரின் மௌனத்தை வரலாறும் கைகொண்டிருக்கும்.
ஆகவே இங்கும் தனிமனிதர்களாக நிற்பதே தேவையாகிறது. வரலாற்று மௌனங்களுக்கு அதீதமாக தன் தனிப்பட்ட நோக்கைக் கொண்டு தன் மனசாட்சியை திருப்திசெய்யும் உண்மைகளை நோக்கிச் செல்லும் தனிமனிதனாக.Jeyamohan
சில பொது இணைப்புகள்
http://www.catholicleague.org/research/deputy.htm
http://www.ansa.it/site/notizie/awnplus/english/news/2008-11-06_106276837.html
http://www.piusxiipope.info/
Wednesday, December 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment